×

மனம் கனக்கிறது... சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

சென்னை: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது குடும்பம் துடிப்பதை போல நாமும் துடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைக்கு சுவாசிக்க தொடர்ச்சியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த கயிறு கட்டி குழந்தை இழுக்க முயற்சி செய்யும் போது அது தோல்வியில் முடிந்தது. துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டது.

இந்நிலையில் சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மணலால் மூடப்பட்ட நிலையில் ஆழ்துளை கிணற்றில் அசைவின்றி குழந்தை சுர்ஜித் இருக்கிறான். இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. 17 மணி நேரமாக சிறுவனை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

Tags : Surjith ,MK Stalin ,Save Surjith ,DMK , Trichy, deep well, Surjith, DMK leader, MK Stalin, Save Surjith
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...