திருச்சி: பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கருவிகளுடன் மணப்பாறைக்கு விரைந்துள்ளனர் என்று காமண்டன்ட் ரேகா நம்பியார் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்ததுபற்றி காலை 3.45 மணிக்கு அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த 20 நிமிடத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மணப்பாறை புறப்பட்டுச் சென்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளது.