×

‘ஐ அம் வெரி சாரி...’ என கூறிவிட்டு திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் தப்பிய பெண்: நம்பிக்கை துரோக வழக்கில் சிறையில் தள்ளியது போலீஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலுனுடன் ஓட்டம் பிடித்த  மணப்பெண், அவரது காதலன், உடந்தையாக இருந்த காதலனின் தம்பி, அவரது மனைவி  உட்பட 5 பேரை போலீசார் நம்பிக்கை துரோக வழக்கில்   கைது செய்தனர். கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே  கொக்குன்னி பகுதியை சேர்ந்தவர் வினுகுமார் மகள்  அஸ்வதி (26). இவருக்கும், இரிங்காடன்பள்ளி பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற வாலிபருக்கும் கடந்த 22ம்  தேதி அப்பகுதியில்  உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. பின்னர். மணமகளின் வீட்டில் மறுவீடு  நிகழ்ச்சிக்கு செல்வதற்காக  உடைகளை மாற்றி வருவதாக கூறிவிட்டு, அஸ்வதி தனது அறைக்கு சென்றார். ஆனால்,  நீண்ட நேரமாகியும் அவர் ெவளியே  வரவில்லை. தேடியபோது அவர் மாயமானது தெரியவந்தது. திருமண  மண்டப கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது, அஸ்வதி  ஒரு காரில் ஏறி சென்றது தெரிந்தது. விசாரணையில், அஸ்வதி  கொக்குன்னி பகுதியை சேர்ந்த  வினேஷ் என்பவரை 4  ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அவருடன் காரில் சென்றதும்  தெரிய வந்தது.

அஸ்வதியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அஸ்வதி, அவரது காதலன்  வினேஷ், வினேஷின் தம்பி ஜினேஷ்,  ஜினேஷின் மனைவி தில்ரூபா, கார் டிரைவர் ஜித் ஆகியோரை  போலீசார் கைது  செய்தனர். மண்டபத்தில் இருந்து அஸ்வதி  செல்லும்போது, தாலி கட்டிய அப்பாவி கணவர் முதுகில் தட்டிவிட்டு ‘ஐ அம் வெரி சாரி...’ என கூறி சென்றுள்ளார். திருமண  பரபரப்பில் கணேஷ் அதை சரியாக கவனிக்கவில்லை. திருமண கோலத்தில் சென்றால்  கண்டுபிடித்து விடுவார்கள்  என்பதால், அஸ்வதி உடைகளை மாற்றிச் சென்றுள்ளார்.  திருமணத்துக்கு காதலனின் தம்பி மனைவி தில்ரூபாவும்  வந்திருந்தார். அவர்தான் அஸ்வதியை காரில் அழைத்து சென்றுள்ளார். காரில்  ஜினேஷும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட  5 பேர் மீதும் நம்பிக்கை  துரோகம், சதித்திட்டம் உட்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர். அவர்களை கோழிக்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் காவலில்  வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். தில்ரூபாவுக்கு உடல்நல குறைவு  ஏற்பட்டிருந்ததால் அவரை தவிர,  மற்ற 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

அப்பாவி மாப்பிள்ளை
அஸ்வதிக்கும், கணேசுக்கும் கடந்த ஏப்ரலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பிறகு, அஸ்வதியிடம் அடிக்கடி பேசுவதற்காக கணேஷ் விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அந்த செல்போனில்தான் அஸ்வதி தனது  காதலனுடன் பேசி  வந்துள்ளார்.

Tags : marriage Woman ,jail , Marriage, lover, woman, prison, police
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!