×

இந்திய-சீன உச்சி மாநாடு முதல்வருக்கு பிரதமர் பாராட்டு

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ‘சீன குடியரசு தலைவரின் வருகையின் போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு ஆகியவை நமது கலாச்சாரத்தையும், மரபையும் ஒருசேர பிரதிபலித்தது. மாமல்லபுரத்தில் நடந்த இந்திய - சீன உச்சி மாநாடு எனக்கும், சீன நாட்டு குடியரசு தலைவருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தமைக்கு தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும்,  தமிழ்நாடு அரசிற்கும், முதல்வருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். இவ்வாறு  கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : summit ,Indo-China ,summit chief , Prime Minister congratulates, Indo-China summit chief
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...