புதுடெல்லி: அரியானாவில் ஜனநாயக மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. டெல்லியில் அமித்ஷாவுடன் ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டின் படி அரியானா மாநிலத்தின் துணை முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார்.