மதுரை: கச்சநத்தம் மோதலில் 3 பேர் உயிரிழந்த வழக்கில் 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி உள்நோக்கத்துடன் முன்கூட்டியே சதி செய்து திட்டமிடப்பட்டு நடைபெற்ற ஒரு குற்ற சம்பவம் இது என்றும், ஒரு கிராமத்தினர் மீது உயிர் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.