சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீக்காயங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதியும், மழைக்காலமாக இருப்பதாலும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.