×

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குவங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28, 29ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று அம்மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Thundershowers ,Tamil Nadu ,Puducherry Thundershowers ,Puducherry , Tamil Nadu, Puducherry, Rain, Chennai Weather Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...