சேலம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்று அமமுகவை சேர்ந்த புகழேந்தி கூறியுள்ளார். சேலத்தில் முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் சேருவதற்காக தற்போது வரவில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தனது 35 ஆண்டு கால நண்பர் என்று கூறியுள்ளார்.