மதுரை: மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அம்பிகாபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், அவரது மகன் தேவநாத் ஆகியோர் கடத்தி வந்த போது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். சிடி டிஸ்க் வடிவத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 350 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.