கோவா: கோவா ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மீனவர்கள் புயல் காரணமாக கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 300க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தர கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.