×

கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் தாக்குதல்: 37 பேர் கைது

கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபத்தில்  கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்கள் உடைத்து அட்டகாசகத்தில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிலவியதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் கற்களை கொண்டு ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரியின்  ரசிகர்களின் அட்டகாசத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தது . ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. தீ வைத்து எரிக்கப்பட்டன. சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : release ,Karnataka ,Bigg ,Krishnagiri , Bigil, Krishnagiri
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!