×

அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் இனிப்புகள் மற்றும் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வந்தார். அவரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், பென்ஜமின், சரோஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வர் எடப்பாடியும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். பின்னர், கட்சி அலுவலகத்திற்கு சென்று கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினர்.பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. இந்த கூட்டணி தொடரும்.

இந்த வெற்றி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். மக்களுக்கு நம்பிக்கை மிக முக்கியம். அந்த நம்பிக்கை இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் வெல்லலாம். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும், அரசால் அறிவிக்க முடியாது’’ என்றார். ‘‘தமிழகத்திற்கு 6  மருத்துவ கல்லூரி தேவை என்று நாங்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பிரதமருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளை  கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான்’’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Tags : Celebration ,AIADMK Headquarters , AIADMK Headquarters
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்