×

நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு போதையில் இருந்த கேரள பெண்ணை கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லை: ஓட்டல் ஊழியரிடம் போலீசார் விசாரணை

சென்னை: நட்சத்திர ஓட்டல் அறையில் போதையில் இருந்த கேரள இளம் பெண்ணை கட்டிலில் தள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  ஆழ்வார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். அலுவலக வேலையாக கடந்த 22ம் தேதி சென்னை வந்த இந்துமதி, ஆழ்வார்பேட்டை டிடிகே  சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.ேநற்று முன்தினம் இரவு அறையில் இந்துமதி மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஓட்டல் ரூம் சர்வீஸ் ஊழியரை அழைத்து வேலை வாங்கி உள்ளார். வேலை முடிந்த உடன் ஓட்டல் ஊழியர் அறையில்  உள்ள ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு, போதையில் தனியாக இருந்த இந்துமதியை கட்டிலில் தள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத இந்துமதி, உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் தங்கி இருந்த நபர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் ஓடிவந்து இந்துமதியை ஓட்டல் ஊழியரிடம் இருந்து மீட்டனர். பிறகு சம்பவம்  குறித்து இந்துமதி தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தவறாக நடந்த ஓட்டல் ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், திருச்சி மாவட்டம் துறையூர் ஆலந்துடைப்பட்டியை ேசர்ந்த மாணிக்கம் (32) என்று  தெரியவந்தது. இவர், ஓட்டலில் தனியாக தங்கிய வேறு ஏதேனும் பெண்களிடம் இதுபோன்று தவறாக நடக்க முயன்றாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நட்சத்திர ஓட்டலில்  பரபரப்பு ஏற்பட்டது.


Tags : policewoman ,Kerala ,star hotel ,Sexual harassment , Stare,star hotel, Kerala woman ,Police ,hotel worker
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு