×

லண்டன் அருகே கேட்பாரற்று நின்றிருந்த கன்டெய்னரில் பிணமாக கிடந்த 39 பேரும் சீனர்கள்

லண்டன்: லண்டன் அருகே நேற்று முன்தினம் கேட்பாரற்று நின்றிருந்த கன்டெய்னரில் பிணமாக கிடந்த 39 பேரும், சீனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை அடுத்த கிரேஸ் பகுதியில் உள்ள தொழிற்பூங்கா அருகே நேற்று முன்தினம் கன்டெய்னர் ஒன்று கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்தபோது, 39 பேர் இறந்துகிடந்தனர்.

 பெல்ஜியத்தில் இருந்து இங்கிலாந்து வந்த இந்த கன்டெய்னரில் கிடந்த 39 பேரும் இறந்தது எப்படி என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.இதையடுத்து அந்த கன்டெய்னர் தில்புரி துறைமுக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக எஸ்ஸெக்ஸ் போலீசார் குடியுரிமை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைமேற்கொண்டனர். இதில்்  இறந்து கிடந்த ஒரு சிறுவன் உள்பட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



Tags : London ,Corpses ,Chinese , Standing, unheard ,London,corpses ,Chinese
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...