×

மும்பையில் தமிழர் 2வது முறையாக வெற்றி

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஒன்றான சயான் கோலிவாடாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் 3,738 வாக்கு வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளர் மங்கேஷ் சாட்டம்கரை வெற்றி கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் பாஜ மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் அந்த கூட்டணி சார்பில் சயான் கோலிவாடாவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ் குமார் யாதவ் போட்டியிட்டார். இவரும் தமிழர் என்பதால் இந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் எம்.எல்.ஏ. ஒருவர் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு செல்வது உறுதியாகியிருந்தது. இதில் கேப்டன் தமிழ்ச்செல்வன் 50,329 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் கணேஷ் குமார் யாதவை 15,554 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கணேஷ் குமார் யாதவுக்கு 34,775 வாக்குகள் கிடைத்தது. இவரைத் தவிர இந்த தொகுதியில் போட்டியிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Tags : wins ,Tamil ,Mumbai Mumbai , Tamil wins , 2nd time in Mumbai
× RELATED 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப்