×

ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும் : ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை

சென்னை : ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி அடைந்தது. இதையடுத்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில்,  மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister Palanisamy, Deputy Chief Minister, O Paneer Selvam, Nankuneri, Vikravandi, Report
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...