சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்
முத்தமிழ்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த
21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. விக்கிரவாண்டி
தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில்
முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர்
போட்டியிட்டனர்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி
மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில்
ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில்
81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம்
வாக்குகளும் பதிவாகின.
தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு
தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு
எண்ணிக்கை தொடங்கிய முதல், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில்
அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி
தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். சுமார்
1,13,428 வாக்குகள் பெற்றநிலையில், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646
வாக்குகள் பெற்றிருந்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர்
முத்தமிழ்ச்செல்வன் 44, 782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரம்:
விக்கிரவாண்டி தொகுதி: அதிமுக வெற்றி
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 1,13,428 வாக்குகள் (44,782 வாக்குகள் வித்தியாசம்)
திமுக வேட்பாளர் நா.புகழேந்தி: 68,646 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி: 2,826 வாக்குகள்
நாங்குநேரி தொகுதி: அதிமுக முன்னிலை
அதிமுக வேட்பாளர் நாராயணன்: 63,780 வாக்குகள் (18,900 வாக்குகள் வித்தியாசம்)
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்: 44,880 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன்: 1,831 வாக்குகள்