சென்னை : 2 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்தார். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் பழனிசாமி இதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையை சொன்னோம் ஆனால் மக்கள் அதனை நம்பவில்லை, தற்போது நம்பியுள்ளனர் என்றும் உண்மையை அறிந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் கூறினார்.