×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் காவலில் உள்ள ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுவின் இன்றைய விசாரணையின் போது, ப. சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது உடல் எடை 78ல் இருந்து 68 கிலோவாக குறைந்துள்ளது என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். 


Tags : INX Media ,p. Chidambaram ,enforcement department ,Supreme Court , INX, Media, Abuse, Investigation, Enforcement, Supreme Court, Notice
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...