×

இரு மாநில சட்டமன்ற தேர்தல் நிலவரம்: மகாராஷ்டிராவில் பாஜக வெற்றிமுகம்...அரியானாவில் இழுப்பறி

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில்  இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 288  தொகுதிகள் கொண்ட  மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜ-சிவசேனா ஒரு அணியாகவும், நவநிர்மான் சேனா, வஞ்சித்பகுஜன்  அகாடி, பகுஜன் சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன. இத்தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

அரியானாவில் ஆளும் பாஜ.வுக்கு எதிராக காங்கிரஸ், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது.   இதுதவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளும்  போட்டியிட்டுள்ளன. இம்மாநிலத்தில் 68 சதவீத வாக்குகள்   பதிவாகின.

தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி  முன்னிலை வகித்தது. இந்நிலையில், 178 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வெற்றி முகத்தில் உள்ளது.

அரியானாவில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக 40 தொகுதிக்கு மேலும், காங்கிரஸ் 36 தொகுதிகளுக்கு மேலும், மற்றவை 14 தொகுதிகளுக்கு மேலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால், அரியானாவில் கடும் போட்டி நிலவி வருகிறது. 


Tags : Maharashtra ,BJP ,victory , Two state assembly polls: BJP's victory in Maharashtra ...
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...