×

மளிகை கடையை உடைத்து 40 சவரன், 1 லட்சம் துணிகர கொள்ளை

பெரம்பூர்: வியாசர்பாடி நியூ மெகசின் சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம் (43).  இவரது மனைவி அருணாதேவி (40). மளிகை கடைக்கு மேலே முதல் மாடியில் இவர்களது வீடு உள்ளது. மளிகை கடையில் உள்ள சிறிய  பீரோவில் பணம் மற்றும் நகைகளை  வைப்பது  இவர்களது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம்போல கடையை சாத்திவிட்டு செல்வம் தனது வீட்டிற்கு உறங்க சென்றார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடை திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செல்வத்திடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகை மற்றும் ₹1 லட்சம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
புகாரின்பேரில் வியாசர்பாடி குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலகுமரன் மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் குற்றவாளிகளின் உருவங்கள்  நன்றாக பதிந்துள்ளதால் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இவர்கள் எந்த ஏரியாவை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புக்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

* பழவந்தாங்கல் காவல் நிலைய போலீசார்  நேற்று மூவரசன்பட்டு பகுதியில் வந்தவரை  சந்தேகத்தில் பிடித்து விசாரித்தபோது மடிப்பாக்கம், விக்னேஷ்வர் நகர், 2வது தெருவை சேர்ந்த கணேஷ் கமல் (26) என்பதும்,  மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும்  தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 250 கிராம் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர்.
* கிண்டி மடுவங்கரை, மசூதி காலனி 4வது தெருவை சேர்ந்த பழனி என்பவரது மகள் ரேணுகாதேவி (18) என்பவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
* கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள தாமரைகேணி குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கொட்டிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : venture robbery , maligai store, 40 shaving, 1 lakh, loot
× RELATED ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை