சென்னை: 596 போலீசாருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கி வருகிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விழாவில் தமிழக டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி, வஹீன்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.