திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறையின் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதீத கனமழைக்ககான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதால் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன. மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணாகுகை, தூண்பாறை, பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.