×

பொன்னமராவதி பகுதியில் விவசாயி தோட்டத்தில் விளைந்த 3 பருப்பு கொண்ட நிலக்கடலை

பொன்னமராவதி: தூத்தூர், கண்டியாநத்தம், ஆலவயல், கல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிலக்கடலை அறுவடை பணியில் ஈபட்டு வருகின்றனர். இப்போது தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடலை அறுவடை செய்ய முடியாமலும், பறித்த கடலையினை காயப்போட முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கண்டியாநத்தம் மகாலிங்கம் என்ற விவசாயியின் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலையில் அதிக அளவு மூன்று பருப்பு கொண்ட கடலைகள் இருந்தது. இதனை பொதுமக்களுக்கு வியப்புடன் பார்த்து சென்றனர். சாதாரணமாக இரண்டு பருப்புகள் கொண்ட கடலை தான் இருக்கும் மேலும் எங்காவது ஒரு சில கடலை மூன்று பருப்பு கொண்டதாக இருப்பது இயல்பு. ஆனால் இங்கு அதிக அளவு நிலக்கடலைகள் மூன்று பருப்பு கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : garden ,Ponnamaravati. Groundnut , Groundnut
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...