சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய அதிகாரி பாலசந்திரன் பேட்டியளித்துள்ளார்.