திருநெல்வேலி: தேர்தல் விதிமீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த நாங்குநேரி எம்.பி.வசந்தகுமார் மீது தேர்தல் அதிகாரி ஜான் கபிரியேல் அளித்த புகாரின் கீழ் 171எச், 130, 143 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து எம்.பி.வசந்தகுமாரை போலீசார் கைது செய்து கன்னியாகுமரி நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.