சென்னை: தாம்பரம் அருகே தனியார் நகை கடையில் இரவு கதவை அடைக்க முயன்ற போது தானியங்கி கதவு தானாக பூட்டிக் கொண்டதாக கூறப்டுகிறது. இந்நிலையில் கதவு தானாக பூட்டிக் கொண்டதால் நகைக் கடை ஊழியர்கள் 17 பேர் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். மேலும் இரவு 11 மணிக்கு போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வெல்டிங் கட்டர் மூலம் கதவை உடைத்து ஊழியர்களை மீட்டனர்.