சென்னை: டாக்டர் பட்டம் பெற்றுள்ள முதல்வர் எடப்பாடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: சவாலான சூழ்நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க நல்ல திட்டங்களைத்தீட்டி சிறப்பாக முதல்வர் பணியாற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததற்கு பாராட்டி நற்பணி தொடர வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.