×

மாநகர பஸ்சில் கண்டெடுத்த பர்சை உரியவரிடம் வழங்க ரூ. 2 ஆயிரம் கேட்ட பெண்: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: மாநகர பஸ்சில் கண்டெடுத்த பர்சை உரியவரிடம் ஒப்படைக்க ₹2 ஆயிரம் கேட்ட பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். கிண்டியை சேர்ந்தவர் குமரவேல் (25). இவர், நேற்று காலை கிண்டியில் இருந்து மாநகர பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். பஸ்சை விட்டு இறங்கி சிறிது தூரம் சென்றபோது, தனது பர்சை பஸ்சில் தவறவிட்டது தெரிந்தது. இதனால், விரைந்து சென்று பஸ்சில் இருந்து இறங்கியவர்களிடம் குமரவேல் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, சென்னை சர்மா நகரை சேர்ந்த மணியம்மாள் (27) என்பவர், குமரவேலிடம் சென்று ‘‘இது உங்கள் பர்ஸ் தானே. கீழே கிடைத்தது. இதை உங்களிடம் தரவேண்டும் என்றால், எனக்கு ₹ஆயிரம் தர வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மணியம்மாளிடம் இருந்து பர்சை வாங்கி குமரவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் மணியம்மாளை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று எச்சரித்து அனுப்பினர்.

Tags : Rs. 2 Thousand,Hearing Woman, Police,Investigation
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...