×

ஜெருசலேம் புனித பயணம் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க நவ.30 வரை கால அவகாசம்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில், அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 50  கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளும் புனித பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை  www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

இதற்கான காலக்கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு, இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை, கல்சா மஹால் பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு நவம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். நேரில் வரவேண்டியதில்லை. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்னை-1, சிறுபான்மையினர் நல இயக்குநரகம், தொலைபேசி எண் 044-28520033ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : Collector ,Jerusalem , Time ,financial support ,Jerusalem pilgrimage deadline, Collector information
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...