×

மாமல்லபுரம் கடற்கரை அனுபவம் பிரதமர் மோடி எழுதிய கவிதை

புதுடெல்லி: மாமல்லபுரம் வந்த அனுபவம் குறித்து பிரதமர் மோடி எழுதிய கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்திலும், கோவளத்திலும் சமீபத்தில் நடந்தது. அப்போது, மாமல்லபுரத்தில் உள்ள பழங்கால சிற்பங்களின் பெருமைகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். மேலும், தமிழ் பாரம்பரியப்படி வேட்டி, சட்டை அணிந்திருந்த அவர், தமிழ் மொழியின் பெருமையையும் புகழ்ந்து பேசினார். மேலும், கோவளத்தில் கடற்கரையில் அதிகாலையில் வாக்கிங் சென்றார். சீன அதிபருடனான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நடந்ததாகவும், தமிழக மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அவர் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மாமல்லபுரத்தின் அழகு, கடற்கரையில் அவர் சென்ற வாக்கிங் அனுபவம் உள்ளிட்டவை குறித்து கவிதை நடையில் பிரதமர் மோடி எழுதியுள்ளார். அதில் சில வரிகள்: ‘‘அலைகடலே! அடியேனின் வணக்கம் அளப்பரிய, முடிவற்ற, ஒப்பில்லாத, வர்ணனைகளைக் கடந்த, நீலக்கடலே...உலகிற்கு உயிரளிக்கும் நீ பொறுமையின்
இலக்கணம் ஆழத்தின் உறைவிடம்...- என ஒரு பக்க கவிதை தொடர்கிறது.


Tags : Mamallapuram , Poem , Mamallapuram, Beach Experience, PM Modi
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...