×

மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் வைகை அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு சந்திப்பில் நிறுத்தம்: ரயில்வே

செங்கல்பட்டு: மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் வைகை அதிவிரைவு ரயில் இன்று ஒருநாள் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு பிற்பகல் 2.40-க்கு வைகை அதிவிரைவு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலான 3-வது இருப்பு பாதை பணி நடைபெறுவதால் வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : Vaigai Express ,Madurai ,Chennai ,Chengalpattu junction ,Railway. Chengalpattu junction ,stop , Madurai, Chennai, Vaigai Express, Chengalpattu
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி