×

இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

சென்னை: ஆன்மீக பயணமாக இமயமலை சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‘’தர்பார்’’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 13ம் தேதி இமயமலை புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த். அங்கு ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் உள்பட பல இடங்களுக்கு சென்று வாழிபாடு செய்ததுடன், அங்குள்ள சாதுக்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’இமயமலை பயணம் நன்றாக இருந்தது’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். அரசியல் பற்றிய எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

Tags : Himalayas Rajinikanth ,Chennai ,Himalayas , Rajinikanth,returns, Chennai,completing, Himalayas
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...