×

தவறான பார்வையுடன் குழந்தைகளை அணுகுவதே வன்கொடுமைதான்: நீதிபதி கருத்து

ஈரோடு: தவறான பார்வையுடன் குழந்தைகளை அணுகும் எந்த செயலும் பாலியல் வன்கொடுமைதான் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பிரகாஷ் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மகளிர் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறையை எதிர்த்து பிரகாஷ் தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை என்பது உடல் ரீதியாக ஏற்படுத்துவது மட்டுமல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். குழந்தை முன் தவறாக வெளிக்காட்டுவது, குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்வது போன்றவையும் வன்கொடுமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : children ,opinion. Judge ,judge , Judge, comment
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்