×

சட்டமன்ற தேர்தல் பரப்புரை ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு...மகாராஷ்டிரா, அரியானாவில் மீண்டும் பாஜ ஆட்சியை கைப்பற்றுமா?

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பாஜ - சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்கின்றன.  எதிர்க்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் உள்ளன. ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித்  பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்பி ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சிகளும் களத்தில் உள்ளன.

இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேற்கண்ட இரு மாநிலங்களிலும் கடந்த சில  தினங்களாக பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜ தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இன்று மாலை 6 மணியுடன் மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது. தொடர்ந்து நாளை மறுநாள் (அக். 21) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாளை மறுநாள் மாலை 5 மணி வரை, கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே, இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் பாஜ ஆட்சியை கைப்பற்றுமா? எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.


Tags : Election ,election campaign , Two-state assembly election campaign ends tomorrow
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...