திருமங்கலம் :திருமங்கலம் அருகே பரபரப்பான நான்குவழிச்சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாருமதி (45). இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்திற்கு காரில் நேற்று வந்தனர். திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்றபோது வெங்கடேஸ்வரனுக்கு வழி தெரியாததால் காரை நிறுத்தி, அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஜெயராமனிடம் திருப்பரங்குன்றத்திற்கு வழி கேட்டுள்ளார்.