×

தன்னிடம் சண்டை போட்டவரின் 4 மாடி கட்டிடத்தை 1 கோடிக்கு விலைக்கு வாங்கி இடித்த வியாபாரி: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: தன்னிடம் சண்டை போட்ட டைல்ஸ் வியாபாரியின் 4 மாடி கட்டிடத்தை 1 கோடிக்கு விலைக்கு வாங்கிய எலக்ட்ரிக்கல் வியாபாரி, அதை தனது கோபம் தீரும் வரை இடித்து தரைமட்டமாக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூரை சேர்ந்தவர் சேகர், டைல்ஸ் வியாபாரி. இவர் 60 லட்சம் மதிப்பில் 4 மாடி கட்டிடம் கட்டி வசித்து வந்தார். இந்நிலையில், சேகர் வீட்டின் அருகே எலக்ட்ரிக்கல் வியாபாரி வெங்கடரமணராஜு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சேகர் இடத்திற்கு அருகே 20 அடி வரை பள்ளம் தோண்டினார்.

இதனால், சேகரின் கட்டிடம் வலுவிழந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேகர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றார். பின்னர் சேகர், வெங்கட்ரமண ராஜுவிடம் எனது வீட்டிற்கு அருகே 20 அடிக்கு மேல் ஏன் பள்ளம் தோண்டுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடரமணராஜு சேகரிடம் 1 கோடியை கொடுத்து  அவரது 4 மாடி கட்டிடத்தை விலைக்கு வாங்கினார். பின்னர், பொக்லைன் இயந்திரம் கொண்டு   40 நிமிடங்களில் 4 மாடி கட்டிடத்தையும் தனது ஆத்திரம் தீரும் வரை இடித்து தரை மட்டமாக்கினார். தன்னிடம் சண்டை போட்ட ஒரே காரணத்திற்காக கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதை அவர் தரைமட்டமாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dealer ,building , 4 storey building, dealer, Andhra
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி