×

வேலைவாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி மணிமாறன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மணிமாறனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tags : employer , Denial of bail,fraudulent employer
× RELATED முதலாளி ரூ.2 லட்சம் தராததால் டிரைவரை கடத்தி சரமாரி தாக்குதல்