×

வெப்ப சலனம் நீடிப்பு தமிழகத்தில் மழை தொடரும்

சென்னை:வட தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை அயனாவரத்தில் நேற்று 130மிமீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர் 120மிமீ, சென்னை 100 மிமீ, டிஜிபி அலுவலகம் 80மிமீ, எம்ஜிஆர் நகர் 70மிமீ, அம்பத்தூர் 60மிமீ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 50மிமீ, மணப்பாறை, செங்குன்றம், வேதாரண்யம் 40மிமீ, கோவில்பட்டி, தென்காசி, உதகம்ண்டலம், உடுமலை பேட்டை, மேட்டுப்பாளையம், அண்ணாலைமலைப் பல்கலைக் கழகம், கேளம்பாக்கம் 30மிமீ மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வட மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. அதனால் தமிழகம் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது  தவிர கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.


Tags : Tamil Nadu , Heavy rains continue , rain,Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...