மதுரை : விண்வெளி விஞ்ஞானி, மர்ம முறையில் உயிரிழந்த வழக்கில் பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் 8 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி தினேஷ் நண்பர்களுடன் அனந்தன் கால்வாயில் குளித்த போது மரணம் அடைந்தார். தினேஷ் மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி அசோசியஸ் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் அமர்வு விசாரணை செய்து வருகிறது.