மதுரை : தமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு 6 மற்றும் 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசை கலைஞர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.