×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ1 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ1 கோடியே 84ஆயிரம் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து,  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

அதன்படி, இந்த மாத(புரட்டாசி) பவுர்ணமி கடந்த 13ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு தொடங்கி, 14ம் தேதி அதிகாலை 2.15  மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ1 கோடியே 84 ஆயிரத்து 423ம், 179 கிராம் தங்கமும், 597 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Tags : Thiruvannamalai Annamaliyar Temple , Thiruvannamalai, Annamaliyar Temple, Undertaking
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை