நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பதிநகரில் வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பரிகார பூஜை செய்வது போல் நடித்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பூஜையில் வைத்திருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பூஜையில் வைத்திருந்த நகைகளை திருடி சென்ற முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.