×

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள குருபூஜை ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள குருபூஜை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி வருகிறார். அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அன்று தேவர் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து குறித்து ஆட்சியர் விரராகவ ராவ் ஆய்வு நடத்தி வருகிறார். 


Tags : Collector ,Pasumpon village ,Ramanathapuram district , Collector's survey ,Kurupuja arrangements ,held at Pasumpon village ,Ramanathapuram district
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...