சென்னை: கல்கி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணத்துக்கு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டுப் பணம் சிக்கியதால் அமலாக்கத்துறையும் விசாரணைக்கு அழைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் கல்கியின் மகன் கிருஷ்ணன், மருமகள், மேலாளர் ஆகியோரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.