×

36 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது

சென்னை: 36 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலிக்கு விமான சேவை துவங்கியது. சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம், யாழ்ப்பாணம் கிளம்பி சென்றது. முதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இலங்கையில் 1983 ல் நடந்த உள்நாட்டு போர் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. பலாலியில் உள்ள விமான தளம், தற்போது புதுப்பிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : flight ,Jaffna ,Tamil Nadu ,airline , After 36 years, the airline started from Tamil Nadu to Jaffna
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...