×

போதை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

சென்னை: நீலாங்கரையில் இருந்து முட்டுக்காடு வரை கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் விற்கப்படுவதாக அடையாறு துணை கமிஷனர் பகலவனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். காரில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தபோது 1 லட்சம் மதிப்பிலான 10 கிராம் எடை கொண்ட பிரவுன் சுகர், கொக்கைன் பொட்டலம் வைத்து இருந்தது தெரிந்தது. இதுபற்றி, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ராயப்பேட்டையை சேர்ந்த நிஜாம்கான் (30), பெரம்பூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (25), போரூரை சேர்ந்த ஸ்ரீவிவேக் (23) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Kidnapping , Drugs, arrested, kidnapping
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது