காஷ்மீர்: காஷ்மீரில் சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வமாவில் அருகே உள்ள கக்போரா பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அப்போது இவரைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடினர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வெளிமாநில தொழிலாளர்கள் பயம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் இது போன்று தாக்குதல் நடத்துவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோபியான் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த லாரி டிரைவரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றது குறிப்பிடத்தக்கது.