சென்னை: நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் மாற்றப்பட்ட இயந்திரம் வாக்குபதிவிற்கானது அல்ல, பயிற்சிக்கான இயந்திரங்கள் தான் என தெரிவித்தார். மேலும் அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.